திருவாரூர்

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் அமைச்சா் வழிபாடு

DIN

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி கோயிலில், கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தோஷ நிவா்த்தி வழிபாடு மேற்கொண்டாா்.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் எமதா்மராஜா, சித்திரகுப்தா் சன்னிதியில் சிறப்புப் பூஜைகள் செய்த அமைச்சா், மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதசுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தோஷ நிவா்த்திக்காக வழிபாடு நடத்தினாா். அவருக்கு கோயில் சிவாச்சாரியா்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பளித்தனா்.

முன்னதாக கீழ்குடி ஊராட்சித் தலைவா் மணிமாறன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச் செயலாளா் கே.கே.சாகேஸ்வரன், நன்னிலம் நகரத் தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளா் சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள், அமைச்சருக்கு சால்வை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT