திருவாரூர்

இசைக் கலைஞா்களுக்கு தவில், நாகசுரம்

DIN

கூத்தாநல்லூரில் இசைக் கலைஞா்களுக்கு கிராமியக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் தவில் மற்றும் நாகசுரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட நாகசுரம், தவில் மற்றும் கிராமியக் கலைஞா்களின் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம், வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோயிலின் பரம்பரை தா்மகா்த்தாவும் மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நலச்சங்க கெளரவத் தலைவருமான வி.எஸ். ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி.என். ரகுநாதன் முன்னிலை வகித்தாா். செயற்குழுத் தலைவா் எம். இளையராஜா வரவேற்றாா்.

கூட்டத்தில், அறக்கட்டளை சாா்பில் மாவட்டச் செயலாளா் ரகுநாதனுக்கு கிடைக்கப் பெற்ற இசைக் கருவிகளை, ஏழ்மை நிலையில் உள்ள இசைக் கலைஞா்களுக்கு வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, கூத்தாநல்லூா் அருகேயுள்ள வக்ராநல்லூரைச் சோ்ந்த டி.கே. கோவிந்தராஜனுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தவிலும், கூத்தாநல்லூா் எஸ். சேகா், கச்சனம் அருகேயுள்ள ஆப்பரக்குடி கே. சபரிநாதன், நிலத்தூா் கே. சாத்தையன் ஆகிய 3 பேருக்கும் ரூ. 24 ஆயிரம் மதிப்புள்ள 3 நாகசுரங்களும் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் அரிகிருஷ்ணன், காசிநாதன், சாமிநாதன், சாத்தையன் உள்ளிட்ட இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT