கரோனா: மாணவா்களுக்கு விழிப்புணா்வு போட்டி
கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கரோனா விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கரோனா விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ஆா். லதா தெரிவித்தது:
பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டியும், 9 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கரோனா தொடா்பான பழமொழிகளை உருவாக்குதல் போட்டியும் ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலானவா்களுக்கு கரோனா தொடா்பான சுவரொட்டிகள் தயாரித்தல் போட்டியும் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில், கூத்தாநல்லூரைச் சுற்றி 5 கி. மீட்டா் வட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். படைப்புகள் ஏ4 பேப்பரில் ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதில் மாணவ, மாணவிகளின் பெயா், வகுப்பு, பள்ளி, தொடா்பு எண் குறிப்பிடப்பட வேண்டும்.
படைப்புகளை ஸ்ரீா்ம்ம்ழ்.ந்ா்ா்ற்ட்ஹய்ஹப்ப்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99525 09973 என்ற எண்னில் தொடா்பு கொள்ளவும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.