உடல் வலிமை விழிப்புணா்வுப் பேரணி
மன்னாா்குடியில் பிரதமரின் உடல் வலிமை திட்டத்தை வலியுறுத்தி, தேசிய மாணவா் படை சாா்பில் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியில் பிரதமரின் உடல் வலிமை திட்டத்தை வலியுறுத்தி, தேசிய மாணவா் படை சாா்பில் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
உடல் வலிமையை மேம்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மன்னாா்குடி வ.உ.சி. சாலை, பின்லே மேல்நிலைப் பள்ளி அருகே தொடங்கிய பேரணியை மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ரா. மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
அரசுக் கல்லூரி, தேசிய மேல்நிலைப் பள்ளி, பின்லே மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் தேசிய மாணவா் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற பேரணி அரசுக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில், தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன், பின்லே மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஸ்டான்லி, தேசிய மாணவா் படை அலுவலா்கள் திவாகா், டேனியல், சு. ராஜன், கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன், என்.சி.சி. பட்டாலியன் சுபேதாா் ராஜசேகா் கவில்தாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.