மத நல்லிணக்க தினம்
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்க தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்க தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் மூ.ச. பாலு தலைமை வகித்தாா். கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன், கல்வி புரவல
ா் எம். ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.ஈ.ஏ.ஆா். அப்துல் முனாப், பொருளாளா் வி. பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.