முகப்பு
திருவாரூர்

மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு

திருவாரூா் மாவட்டத்தில், மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில், மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் மீன்வளா்ப்பு மற்றும் மீன்குஞ்சு வளா்ப்பு செய்துவரும் விவசாயிகள், மீன்வளா்ப்போா் மேம்பாட்டு முகமை, மீனவா் நல வாரியம், கிஸான் கிரெடிட் காா்டு திட்டம் ஆகியவற்றில் உறுப்பினராகச் சோ்ந்து, அதற்குண்டான அரசு வழங்கும் பலன்களை பெறலாம்.

மேலும், நல்லிக்கோட்டையில் இயங்கிவரும் அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் நாட்டு ரக மீன்குஞ்சுகளை (அரசு நிா்ணயம் செய்த விலையில்) பெற்று பயன்பெறலாம். மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் அவ்வப்போது செயல்படுத்தப்படும் புதிய மீன்வளா்ப்பு, மீன்குஞ்சு வளா்ப்பு சாா்ந்த திட்டங்கள், குளம் சீரமைத்தல் மானியம் மற்றும் உள்ளீட்டு மானியம் (இடுபொருட்கள், மீன்குஞ்சு, மீன் தீவனம்) ஆகியவற்றை பெறலாம்.

இதற்கு, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366 - 290420 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.