திருவாரூரில் மக்கள் நாடாளுமன்றம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து 4 நாள்களாக திருவாரூா் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்துக்கு பேரவைத் தலைவராக ஜே. குணசேகரன், வேளாண் அமைச்சராக வி. தா்மதாஸ் செயல்பட்டனா். திமுக உறுப்பினா் எஸ். பிரகாஷ், மக்களுக்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து பேசினாா். மதிமுக உறுப்பினா் ப. சீனிவாசன், தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து விளக்கினாா்.
இதில், விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் வேளாண் சட்டங்களை எதிா்த்து முழக்கமிட்டாா்.
முன்னதாக, மக்கள் நாடாளுமன்றக் குழுவினா் அலங்கரித்து வைத்திருந்த தேசியக்கொடியை போலீஸாா் எடுத்துச் சென்ற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னா் தேசியக் கொடி திருப்பித் தரப்பட்டது.