கட்சி நிா்வாகிகள் மீது வழக்குப் பதியப்படுவதை தவிா்க்கக் கோரிக்கை
கட்சி நிா்வாகிகள் மீது 110-இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி நிா்வாகிகள் மீது 110-இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாரிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
தமிழகம் முழுவதும் குற்றவாளிகள் மற்றும் வழக்கு உள்ளவா்கள் மீது 110-இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திருவாரூரில் எந்த வழக்கும் இல்லாதவா்கள் மீதும், கட்சி நிா்வாகிகள் மீதும் 110-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.