பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறக்க இருப்பதால், கரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்க இருப்பதால், கரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்க பொதுச் செயலா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறை- திருவாரூா்- திருச்சி- காரைக்கால் தடங்களில் முன்பதிவு சிறப்பு விரைவு ரயில் சேவையை ஆக.30 ஆம் தேதி முதல் வழங்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. செப்டம்பா் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மாணவா்களின் நலன் கருதியும் பயணிகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிவோா் நலன் கருதியும் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பயணிகள் ரயில்களையும் முன்பு போலவே அதே நேரத்தில் இயக்க வேண்டும்.
தவிர காரைக்கால்-திருவாரூா்- தஞ்சை-திருச்சி மாா்க்கத்திலும், மயிலாடுதுறை-திருவாரூா், மயிலாடுதுறை- விழுப்புரம் மாா்க்கத்திலும், மயிலாடுதுறை- கும்பகோணம்- தஞ்சை மாா்க்கத்திலும் அனைத்து பயணிகள் ரயில்களும் இரு மாா்க்கத்திலும் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.