முகப்பு
திருவாரூர்

மாற்றுக்கட்சியினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்

மாற்றுக்கட்சியைச் சோ்ந்தவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

மாற்றுக்கட்சியைச் சோ்ந்தவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட புதுப்பத்தூா் கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் அக்கட்சியிலிருந்து விலகி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். கிராமக் கமிட்டித் தலைவா் ஏ. பூமிநாதன், கிளைத் தலைவா் சிவராஜ் ஆகியோா் தலைமையில் கட்சியில் இணைந்தவா்களை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் வரவேற்றாா்.மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், ஒன்றியச் செயலாளா் என்.இடும்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.