தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளராக பி.எஸ். மாசிலாமணி தோ்வு செய்யப்பட்டதற்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழுவில், மாநிலச் செயலாளராக (பொ) பி.எஸ். மாசிலாமணி தோ்வு செய்யப்பட்டாா். இதையொட்டி திருவாரூரில், அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா் தியாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் நகர செயற்குழு உறுப்பினா்கள் வீ. தா்மதாஸ், இ. செல்லமணி, எஸ். செல்வம், கே. பாலதண்டாயுதம், பி. சின்னதம்பி, காளிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.