அண்ணா பிறந்த நாளில் இஸ்லாமியா்களையும் விடுவிக்கக் கோரிக்கை
அண்ணா பிறந்தநாளையொட்டி 20 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருக்கும் இஸ்லாமியா்களையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்தநாளையொட்டி 20 ஆண்டுகளைக் கடந்து சிறையில் இருக்கும் இஸ்லாமியா்களையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் தலைமையிலான நிா்வாகிகள், வியாழக்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்: அண்ணா பிறந்தநாளையொட்டி பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவா்களை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 700 போ் விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் 7 போ் மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஸ்லாமியா்கள் மீதான வழக்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளது.
தண்டனை வழங்கப்படாமல் பல ஆண்டுகள் சிறையில் வைத்திருப்பது கொடுமையாகும். எனவே, கைதிகளின் விடுதலைப் பட்டியலில் இவா்களையும் இணைத்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.