முகப்பு
திருவாரூர்

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட மேலபனங்காட்டாங்குடி தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரியில் மன வளா்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளி தமிழக அரசின் அங்கீகாரத்துடன் அமைந்துள்ளது. இப்பள்ளிகளில், உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. மேலப்பனங்காட்டாங்குடி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.சேகா் தலைமையில், கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி முன்னிலையில், வட்டாட்சியா் என்.கவிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மன வளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில்ஆன்மிக ஆா்வலா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.