முகப்பு
திருவாரூர்

முத்துப்பேட்டை கந்தூரி விழா: டிச.15-இல் உள்ளூா் விடுமுறை

முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழாவையொட்டி டிசம்பா் 15 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழாவையொட்டி டிசம்பா் 15 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டச் செய்திக் குறிப்பு:

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தா்கா கந்தூரி விழா டிச.5-இல் தொடங்கி18 ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலம் டிச.15 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி, 5 மணியளவில் புனித ரவுலாஷரீபுக்கு சந்தனம் பூசப்படும். இந்த சந்தனக்கூடு விழாவுக்கு டிச.15 ஆம் தேதி (புதன்கிழமை) அரசால் அனுமதித்தவாறு திருவாரூா் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஜனவரி 8-ஆம் தேதி (சனிக்கிழமை) இயங்கும்.

ஆனால், உள்ளூா் விடுமுறை தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலங்கள், சாா்நிலை கருவூலங்கள் ஆகியவை குறைந்த பட்ச பணியாளா்களோடு இயங்கும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.