முகப்பு
திருவாரூர்

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2014, 2015 மற்றும் 2016 வரை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் மற்றும் 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் வழங்கப்படுகிறது.

இச்சலுகையை பெற விரும்பும் பதிவுதாரா்கள் 2022- ஆம் ஆண்டு மாா்ச் 1-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள், திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குப் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.