பெண்ணிடம் நகை பறிப்பு
மன்னாா்குடி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணை மிரட்டி, 6 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்து சென்றனா்.
மன்னாா்குடி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணை மிரட்டி, 6 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்து சென்றனா்.
மன்னாா்குடியை அடுத்த செருமங்கலம் பிரதான சாலையை சோ்ந்தவா் ராஜாங்கம் மனைவி தேவி (50). செவ்வாய்க்கிழமை இவா் வீட்டின் பின்புறம் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், தேவியை மிரட்டி அவா் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.