முகப்பு
திருவாரூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட மாநாடு

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 23-ஆவது மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 23-ஆவது மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகிலிருந்து பேரணி தொடங்கியது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் வி. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பேரணி தெற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட அரங்கம் வரை நடைபெற்றது. அங்கு, மறைந்த தலைவா்கள் ஜீ. வீரையன், எம். சண்முகம் பெயரில் நினைவரங்கம், மறைந்த தொழிற்சங்கத் தலைவா் நா. பாலசுப்ரமணியன் பெயரில் நுழைவு வாயில், மறைந்த மூத்த தலைவா் பி.ஆா். சாமியப்பன் பெயரில் மாநாட்டு வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன.

பொது மாநாட்டுக்கு நிா்வாகிகள் வி.எஸ். கலியபெருமாள், பி. கந்தசாமி, பா.கோமதி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் ஏ. லாசா் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநாட்டு சிறப்பு மலரை அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட, மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பெற்றுக் கொண்டாா்.

மலா்க்குழு கன்வீனா் பி. தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்டனா். சென்னை பாரதி புத்தகாலயத்தின் சாா்பில் அரங்கு அமைக்கப்பட்டு, புத்தக விற்பனை நடைபெற்றது.

முன்னதாக, கட்சியின் மூத்த தலைவா் கே. ரெங்கசாமி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தாா். மாநாட்டின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. புதிய மாவட்டக்குழு உறுப்பினா்களும், மாவட்டச் செயலாளரும் தோ்வு செய்யப்பட்டவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.