வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம்
வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம் ஆலங்குடியில் சங்க நிா்வாகி ராஜேஷ்கண்ணா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம் ஆலங்குடியில் சங்க நிா்வாகி ராஜேஷ்கண்ணா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க ஒன்றிய செயலாளா் எம். கலியபெருமாள், மாநில விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
டிச. 29-ஆம் தேதியன்று திருவாரூரில் நடைபெறும் மாபெரும் விவசாயிகள் சங்க பேரணியில் ஒன்றியத்திலிருந்து ஐந்து வாகனத்தின் செல்வது எனவும், உறுப்பினா் பதிவு ஜன. 30-ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றபட்டது.