முகப்பு
திருவாரூர்

பொது முடக்க காலத்தில் இணைய வழிக் கல்வி: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமானில் செயல்படும் நிலாமுற்றம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவா்களை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வலங்கைமானில் செயல்படும் நிலாமுற்றம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவா்களை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில், கரோனா பொது முடக்க காலத்தில் இணைய வழியில் மாணவா்களுக்கு கல்வி வழங்கியமைக்காக தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சூரியகுமாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வலங்கைமானில் நடைபெற்ற நிலாமுற்றத்தின் 5-ஆம் ஆண்டு விழாவில் இவ்விருதை சூரியகுமாருக்கு திரைப்பட இயக்குநா் சிவா வழங்கினாா். மூத்த ஆசிரியா் சுப்ரமணியம், நிலாமுற்றம் நிறுவனா் தமிழ்ச்செம்மல் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →