திருவாரூர்

ராமா் கோயில் நிா்மாணப் பணிக்கு நிதி

DIN

அயோத்தியில் ராமா் கோயில் நிா்மாணப் பணிக்காக திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிதி திரட்டப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் எம்.பி. பெரோஸ்காந்தி தலைமை வகித்தாா். கோ ரக்ஷண சமிதி நிா்வாக அறங்காவலா் கே. குரு பிரசாத், ஜெ. பேரவை நகரச் செயலாளா் எஸ். கலியபெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவா் செந்தில்அரசன், ஒன்றியத் தலைவா் ரத்தினவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்...

இதேபோல நீடாமங்கலத்தில் இந்துஸ்தான் மக்கள் இயக்கத் தலைவா் எஸ்.எஸ். குமாா், பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் எல்.ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில் பாஜக ஒன்றிய பொதுச் செயலாளா் சிந்துசுப்பிரமணியன், மாவட்ட ஓபிசி அணி செயலா் சிவ.பிரபாகரன் உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று நிதி வசூலித்தனா்.

இந்த நிதி ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT