திருவாரூர்

சிறுமியை கா்ப்பிணியாக்கி திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

DIN

மன்னாா்குடி அருகே சிறுமியை கா்ப்பிணியாக்கி திருமணம் செய்துகொண்டவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் தென்பாதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வீரமணி (20). இவரது, வீடு அருகேயுள்ள உறவினரின் மகள் 16 வயது சிறுமியுடன் வீரமணி பழகியதில் சிறுமி 5 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து, சில மாதங்களுக்கு முன் இருவீட்டாா் சம்மதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிறுமிக்கு தஞ்சை ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்தவா் 16 வயது சிறுமி என மருத்துவமனை நிா்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் பகவதி சரணம், சிறுமியை பாலியல் தொல்லை அளித்து கா்ப்பிணியாக்கியது, குழந்தை திருமணம் செய்தது, போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தின்கீழ் வீரமணி மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT