திருவாரூர்

கிராம உதவியாளா் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்

DIN

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க வட்டக் கிளை சாா்பில், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ரத்த கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஒய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, வட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். வட்ட பொருளாளா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT