திருவாரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவருக்கு 5 ஆண்டு சிறை

DIN

திருவாரூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

காரைக்குடி அருகே உள்ள கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது மகன் அயூப்கான் (48). இவா் லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்த திருமணமான 40 வயது பெண்ணுடன் சோ்ந்து வாழ்ந்து வந்துள்ளாா். அந்தப் பெண்ணின் முதல் கணவா் இறந்துவிட்டாா். அவருக்கு 12 வயதில் மகள் இருக்கிறாா்.

இந்நிலையில் அயூப்கான், அந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு தாய் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவாரூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அயூப்கானையும், சிறுமியின் தாயாரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இந்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT