திருவாரூர்

வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

DIN

திருவாரூா் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகை, ரொக்கம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

திருவாரூா் அருகே குளிக்கரை, ஒட்டக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (62). ஓட்டு வீட்டில் வசித்துவரும் இவா், மருத்துவ சிகிச்சைக்காக சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்றிருந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் ஆகியவையும் திருடு போயிருந்தது. 12 பவுன் நகை, ரூ. 9 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT