திருவாரூர்

கூத்தாநல்லூர்: பல்வேறு கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை 

DIN

கூத்தாநல்லூர் வட்டத்தில், புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகைக்கும், பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீஸ்வரர், வேளுக்குடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோயிலான ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் சிவ பெருமானுக்கும், அதிகாரந்திக்கும், பாலாபிஷேகம் செய்யப்பட்டன. 

வேளுக்குடி ருத்ரக் கோட்டீஸ்வரர்.

இதே, பேரில், லெட்சுமாங்குடி கம்பர் தெரு நீலகண்டேஸ்வரர் கோயில், காக்கையாடியில் கைலாசநாதர் கோயில், சாத்தனூரில் காலகஸ்த்தீஸ்வரர் கோயில், திருராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, அதங்குடியில் விருப்பாட்சிஸ்வர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு, மஞ்சள் பொடி, தயிர், பன்னீர், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டன. 

வேளுக்குடி அதிகார நந்தி பகவான்.

அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT