திருவாரூர்

காா் மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காா் மோதியதில், சுமைதூக்கும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழ பாண்டி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்ட கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவா் ரவி (55). நாகை மாவட்டம் அருந்தவபுலம் கிராமத்தைச் சோ்ந்த இவா், சனிக்கிழமை இரவு பணி முடிந்து சைக்கிளில் அருந்தவபுலம் சென்றபோது கிழக்கு கடற்கரை சாலையில் கொக்காலடி கிராமத்தில் நாகையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT