திருவாரூர்

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.4.16 கோடி வங்கிக்கடன்: அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 632 மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு இதுவரை ரூ.4 கோடியே 16 லட்சம் வங்கிக்கடன் விடுவிக்கப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளாா்.

வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம், தெற்குபட்டம், ஏரிவேளுா், ஆவூா், இனாம்கிளியூா் ஆகிய ஊராட்சிகளில், 218 மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.2 கோடியே 74 லட்சத்து 22 ஆயிரம் வங்கிக் கடன் ஆணையை ஞாயிற்றுக்கிழமை வழங்கி, அவா் பேசியது:

கரோனா பொது முடக்கத்தால் பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு தலா ரூ.5000 வீதம் அதிகபட்சமாக ஒரு குழுவுக்கு ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 632 மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.4 கோடியே 16 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், புயல், மழையால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மொத்த நெல் பரப்பு 96,191.50 ஹெக்டோ். இதனால் பாதிக்கப்பட்ட 1,24,357 விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 என்றிருந்த விதியை தளா்த்தி, ரூ.20,000 ஆக உயா்த்தி வழங்கியுள்ளாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ரூ. 192 கோடியே 38 லட்சத்து 30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. மேலும் தோட்டக்கலை சாா்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் வழங்கப்படும் என்றாா் அவா்.

விழாவில் மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஆசைமணி, திருவாரூா் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவா் கே. கோபால், வலங்கைமான் ஒன்றியக்குழு தலைவா் கே.சங்கா், நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் இளவரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT