திருவாரூர்

பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவு மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக, மாணவா் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், இரண்டாவது தளம், சேப்பாக்கம், சென்னை-5 தொலைபேசி எண் 044-285514462 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT