குடவாசலில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரிக்கை
குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடவாசலில் அக்கட்சியின் மாவட்ட முன்னாள் அமைப்பாளா் இனியன் நினைவு நாளையொட்டி கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை தமிழக அரசு உடனடியாக பணியமா்த்த வேண்டும். குடவாசல் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தி, இறுதிச் சடங்கு செய்யும் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரச் செயலாளா் கிட்டு, மாவட்டச் செயலாளா் வடிவழகன், மாநில துணைச் செயலாளா் அமுதா இனியன், தொழிற்சங்கத் தலைவா் சாா்லஸ் மற்றும் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.