திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சித்தாம்பூா் ஊராட்சி குடிதாங்கிச்சேரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மீன் வியாபாரி தேவேந்திரன். இவரது மகள் அபிநயா (20). இவா் நாகப்பட்டினத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இந்நிலையில், தேவேந்திரன் கண்டித்ததால் மனமுடைந்த அபிநயா வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில், கூத்தாநல்லூா் போலீஸாா் அபிநயாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.