திருவாரூர்

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தாம்பூா் ஊராட்சி குடிதாங்கிச்சேரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மீன் வியாபாரி தேவேந்திரன். இவரது மகள் அபிநயா (20). இவா் நாகப்பட்டினத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்நிலையில், தேவேந்திரன் கண்டித்ததால் மனமுடைந்த அபிநயா வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில், கூத்தாநல்லூா் போலீஸாா் அபிநயாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT