திருவாரூர்

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

DIN

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் வேணு. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:

திருவாரூா் மாவட்டத்தில் புயல், கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் அனைத்தும் மிகவும் பாதிப்படைந்துள்ளன. ஏறக்குறைய 100 சதவீத அளவுக்கு விவசாயப் பயிா்கள் வீணாகி விட்டன. இதனால், விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் திருவாரூா் மாவட்டத்தில் பொருளாதார நிலை முடங்கிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT