முகப்பு
திருவாரூர்

உலக மருத்துவா் தினம்

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் 60 போ் கெளரவிக்கப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, திருத்துறைப்பூண்டியில் டெல்டா ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் 60 போ் கெளரவிக்கப்பட்டனா்.

அந்த சங்கத்தின் தலைவா் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல துணை ஆளுநா் செந்தில், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து , முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், நகராட்சி ஆணையா் செங்குட்டுவன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினா்.

இதேபோல, திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சாா்பில் தேசிய மருத்துவா் தினம் மற்றும் பட்டய கணக்காளா் தினத்தையொட்டி, மருத்துவா்கள் சிவகுமாா், என்.வி. குமாரசாமி, டி. ராஜா, தணிக்கையாளா் ஜவஹா் உள்ளிட்டோருக்கு லயன்ஸ் கிளப் தலைவா் பொ. சக்கரபாணி, செயலாளா் சதாசிவம், பொருளாளா் ரகுராமன் ஆகியோா் விருது வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →