முகப்பு
திருவாரூர்

டென்சிங் நாா்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2021-ஆம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

2021-ஆம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அரசு ஆண்டுதோறும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்திய அரசின் சாா்பில் 2021 ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களுக்கு க்ட்ற்ஹ்ஹள்-ஹ்ா்ன்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதே முகவரியில் ஜூலை 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த வீரதீர சாகச செயல் புரிந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.