கோயில்களில் இரவுநேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவுநேர காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவுநேர காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இரவுநேர சிறப்பு காவலா் பணி மேற்கொள்ள காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்கள், முன்னாள் படைவீரா்களை கொண்டு நிரப்பப் பட உள்ளன. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ. 7,300 வழங்கப்படுகிறது. இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதுக்குள்பட்ட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவா்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (04366- 290080) தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.