ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை மையமாகக் கொண்ட நிறுவனம் ரூ. 15, 290 கோடிக்கு வாங்கியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை மையமாகக் கொண்ட நிறுவனம் ரூ. 15, 290 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை மையாகக் கொண்டு இயங்கும் கல் சோமானி தலைமையிலான நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியுள்ள கல் சோமானி தலைமையிலான நிறுவனத்தில் வால்மார்ட் குடும்பத்தைச் சேர்ந்த ராப் வால்டன் மற்றும் ஃபோர்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஹம்ப் ஃபேமிலி ஆகியோர் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க டைம்ஸ் இண்டர்நெட், ஆதித்யா பிர்லா மற்றும் மிட்டல் தலைமையிலான நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருந்த நிலையில், கல் சோமானி தலைமையிலான நிறுவனம் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணியை வாங்கியுள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய புதிய ஒப்பந்தம் பிசிசிஐ அனுமதியுடன் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.