புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையில் உள்ள புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ. கோ. பழனிச்சாமி திறந்து வைத்தாா். இதில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் வை. சிவபுண்ணியம், கே. உலகநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா், திமுக நகர செயலாளா்ஆா்.எஸ். பாண்டியன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், காங்கிரஸ் நகரத் தலைவா் பி. எழிலரசன், மதிமுக மாவட்ட பொருளாளா் கோவி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.