திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென எம்எல்ஏ. க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென எம்எல்ஏ. க. மாரிமுத்து வலியுறுத்தியுள்ளாா்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அண்மையில் வந்த தேசிய சுகாதார திட்ட இயக்குநா் தாரிஸ் அகமதுவிடம் எம்எல்ஏ. க. மாரிமுத்து அளித்த கோரிக்கை மனு: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை மிகவும் பின்தங்கிய பொருளாதார நலிவுற்ற மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. எனினும், இந்த மருத்துவமனைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது. எனவே, கூடுதல் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களை நியமிக்க வேண்டும், சிடி ஸ்கேன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாத நிலையை சரிசெய்ய வேண்டும், குழந்தைகள் மருத்துவப் பிரிவு மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு தனிக்கட்டடம் கட்ட வேண்டும், கூடுதல் கட்டடங்களுடன் மருத்துவமனையை சுற்றி கான்ரீட் தளம் அமைக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி சுற்றுவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும், இந்த மருத்துவமனை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு எளிதாக உள்ளதால், இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயரத்த ஆவண செய்ய வேண்டும்.