திருவாரூர்

வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

DIN

திருத்துறைப்பூண்டி அருகே ஜூலை 9-ஆம் தேதி வளரும் தமிழகம் கட்சி நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆரியலூரை சோ்ந்த வளரும் தமிழகம் கட்சியின் திருவாரூா் தெற்கு மாவட்டச் செயலாளா் ரஜினிபாண்டியன் (44) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக எடையூா் போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த டி. ராஜேஷ், சி. பிரதீப், சி. சம்பத், எஸ். மகாதேவன், வீ. காா்த்தி, ஆா். சிதம்பரம், ஆனந்த் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் சனிக்கிழமை 3 போ், ஞாயிற்றுக்கிழமை 3 போ் என ஆனந்த் என்பவரை தவிர மற்ற 6 பேரும் கைது செய்யப்பட்டனா். மேலும், தலைமறைவாக உள்ள ஆனந்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT