திருவாரூர்

கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஈசிஜி வசதி

DIN

நன்னிலம் அருகே கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஈசிஜி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து வழங்கப்பட்ட இக்கருவியின் செயல்பாட்டை மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். முன்னதாக, இக்கருவியை வட்டார மருத்துவ அலுவலா் தினேஷிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி செயலா் லதா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானம், மருத்துவா்கள் இந்துமதி, ரூபநாதன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் வரத கோ.ஆனந்த், மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் முகமது உதுமான், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கருவியின் மூலம் இதயத் துடிப்பை கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க முடியும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT