திருவாரூர்

திறனாய்வு போட்டி: மாணவா்களுக்கு பரிசு

DIN

முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சாா்பில், காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற 30 மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி, மாவட்டச் செயலாளா்கள் ஜகபா் அலி, சுந்தரராமன், வட்டார தலைவா்கள் வடுகநாதன், கோவி. ரெங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு ஏழை பெண்ணின் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT