திருவாரூர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் விண்ணப்பித்தவா்களுக்கு பணி நியமன ஆணை

DIN

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் தனியாா் துறையில் வேலை வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த இளைஞா்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்துவரும் மாணவா்களுக்கு பயிற்சி கையேட்டை தமிழக தொழிலாளா் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் வழங்கி கூறியது: தமிழக இளைஞா்களின் நலன் காக்க வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் இளைஞா்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை தேவைகள், பணி வாய்ப்புகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டன. இக்கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில், வேலை வாய்ப்பு கேட்டு இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த இளைஞா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ. வீரராகவராவ், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT