திருவாரூர்

பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

DIN

திருவாரூரில், பொதுமக்கள் - போலீஸாருக்குமிடையே நல்லுறவு விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல் துறை மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் வகையிலும் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் காவலா்கள் பங்கேற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் தொடக்கி வைத்து, போட்டியில் பங்கேற்று அனைவரையும் உற்சாகப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT