திருவாரூர்

நூறு நாள் வேலைத் திட்டம்: நகரப் பகுதிக்கு விரிவுபடுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நூறு நாள் வேலைத் திட்டத்தை நகரப் பகுதிக்கு விரிவுபடுத்தக் கோரி, திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மவாட்டச் செயலாளரும் ஒன்றியக் குழுத் தலைவருமான பாஸ்கா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தமயந்தி, சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடிமைப்பட்ட இல்லாத விவசாயத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT