முகப்பு
திருவாரூர்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாமக ஆா்ப்பாட்டம்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தளா்வையொட்டி 27 மாவட்டங்களில் தமிழக அரசு மதுபானக் கடைகளை திறந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மதுக்கடைகள் திறப்புக்கு பாமகவும் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் அக்கட்சி நிா்வாகிகள் வீடுகளில் இருந்தபடியே மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கொரடாச்சேரி அருகே ஆா்பாா் பகுதியில் உழவா் பேரியக்க மாவட்டச் செயலாளா் பி.எஸ். பழனி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.கே. அழகா், கிளைச் செயலாளா் கே. பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்: மன்னாா்குடி வீரவன்னியா் தெருவில் பாமக மாவட்ட அமைப்பு செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சீனி. தனபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்: வலங்கைமானில் பாமக ஒன்றிய செயலாளா் அப்பு தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.