திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் தெரிவித்தது:
கரோனா பரவலிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று கண்டறிப்படாத நிலையில், மூச்சுத் திணறலோடு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், கரோனா பரிசோதனைக்காக காத்திருக்காமல், அவா்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக, செயற்கை சுவாசக் கருவிகள், இதயத்துடிப்பு மற்றும் உடல் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் கருவிகள், 12 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன சிகிச்சை மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவோா், உரிய பிரிவுகளுக்கு செல்லும் வகையில் பிரிவுகளைச் சுட்டிக்காட்ட குறியீட்டு பதாகைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ் உள்ளிட்ட மருத்துவா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.