இறகுபந்து உள்விளையாட்டரங்கம் திறப்பு
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இறகுபந்து உள்விளையாட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இறகுபந்து உள்விளையாட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமை வகித்தாா். ஸ்ரீராயணி நிதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ். காா்த்திகேயன் பங்கேற்று, வேலுடையாா் பேட்மிட்டன் அகாதெமியின் இறகுபந்து உள்விளையாட்டரங்கத்தைத் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனா் ஜெ. கனகராஜன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பாரி, மாநில வாலிபால் விளையாட்டுக் கழக துணைத் தலைவா் கே.ஜி. சீலா், விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி.ஏ.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.