ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் தகவல்
ஈரானில் தொடரும் தாக்குதல்களில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் இன்று (மார்ச் 24) தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் ஈரான் ஆடிப்போனது. அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு மார்ச் 23-இல் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைப்பொருட்படுத்தாமல், தாக்குதல்கள் இன்றும் (மார்ச் 24) தொடர்கின்றன. இந்தப் போரில் இதுவரை, ஈரானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உயிரிழப்பு 15 ஆகவும், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும், வளைகுடா நாடுகள் மற்றும் மேற்கு கரையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12-ஐ கடந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.