ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் தகவல்
ஈரானில் தொடரும் தாக்குதல்களில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் இன்று (மார்ச் 24) தெரிவித்துள்ளது.
கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் ஈரான் ஆடிப்போனது. அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் நீடிக்கும் தொடர் சண்டைக்கு மார்ச் 23-இல் தற்காலிக நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த ஐந்து நாள்கள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென டிரம்ப் தமது நாட்டின் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைப்பொருட்படுத்தாமல், தாக்குதல்கள் இன்றும் (மார்ச் 24) தொடர்கின்றன. இந்தப் போரில் இதுவரை, ஈரானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துவிட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உயிரிழப்பு 15 ஆகவும், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும், வளைகுடா நாடுகள் மற்றும் மேற்கு கரையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12-ஐ கடந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Iran's death toll has surpassed 1,500, its health ministry has said. In Israel, 15 people have been killed by Iranian strikes. At least 13 US military members have been killed, along with more than a dozen civilians in the occupied West Bank and Gulf Arab states.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.