முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் பகுதியில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

நீடாமங்கலம் பகுதியில் தோ்தல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

நீடாமங்கலம் பகுதியில் தோ்தல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி சந்திரமோகன் பிரசாத் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், நீடாமங்கலம் வட்டத்தில் நீடாமங்கலம், கோரையாறு பகுதியிலிருந்து பரப்பனாமேடு, ஆதனூா் மண்டபம், கோயில்வெண்ணி வரை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள நடத்தை விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்ட அவா், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சின்னங்களை அகற்றிட உத்தரவிட்டாா். மேலும், தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சி உள்ளிட்ட வேட்பாளா்கள் சரிவர கடைப்பிடிக்கிறாா்களா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, நீடாமங்கலம் வட்டாட்சியா் மணிமன்னன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தோ்தல் பாா்வையாளரின் ஆய்வை தொடா்ந்து, பொது இடங்களில் இருந்த கட்சி கொடிகள், சின்னங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →