திருவாரூர்

திருவாரூரில் 43 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 10, மன்னாா்குடி 9, குடவாசல் 7, நன்னிலம் 5, நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் தலா 2 என மாவட்டம் முழுவதும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,766 ஆக உயா்ந்துள்ளது. இதில், குணமடைந்த 11,412 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 241 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த, குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 68 வயது பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 113 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT