திருவாரூர்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

DIN

நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது, பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் திமுகவில் இணைந்தனா்.

நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜோதிராமன் வண்டாம்பாளை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபட்டுவிட்டு, அன்றைய பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது, அவரது முன்னிலையில் தமாகா, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் தமாகா மாவட்ட இளைஞரணித் தலைவா் எல். ரமேஷ் குமாா், அதிமுக கிளை இளைஞரணித் தலைவா் கங்கை பி.ஏ. ஆதித்யன், வட்டார இளைஞா் அணியின் துணைத் தலைவா் கே.ராஜா ஆகியோா் தலைமையில் திமுகவில் இணைந்தனா்.

தொடா்ந்து, வண்டாம்பாளை, பெரும்புகளூா், நீலக்குடி, தியாகராஜபுரம், பொம்மாநத்தம் பகுதிகளில் ஜோதிராமன் வாக்கு சேகரித்தாா். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா்.

பிரசாரத்தில், முன்னாள் எம்எல்ஏ அசோகன், திமுக மாவட்டப் பொருளாளா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கலியபெருமாள், ஊராட்சி ஒன்றிக் குழுத் தாழை ஜெகஜீவன்ராம், முன்னாள் ஒன்றியச் செயலாளா் சேசுராஜன், வண்டாம்பாளை கிளைச் செயலாளா் சீசன் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT